செவ்வாய், 1 அக்டோபர், 2013

பிரிதொரு முறை
வருவேனென
சொல்லிவிட்டு
சென்றது,
மாலையில்
என் வீடு வந்த
முற்றத்து நிலா!!
நேற்றைய
சிறுமியின்
கைகள்
அறிந்திருக்கவில்லை,
தான் பிடித்திருக்கும்
இன்றைய
சாணக் கரைசல்
பக்கெட்,
நாளை
கணினியின்
எலியாகுமென்று!!
மனிதம்
செத்து
மனிதர்
முழித்திருக்க
அருமையான
சமூகம்
உன்னில்
என்னைக்
கண்ட
நாள்
முதல்
நானும்
உன்னுடையதாய்!!
வாழ்வினில்
சூது கவ்வும்
எப்போழுதுமல்ல!
மனிதா,
விழித்திரு
எப்போதும்!!
உன்னை
நீ அறிய
முயன்றால்
அந்த முயற்சிக்கே
இவ்வுலகம்
உன்னை
நினைந்திடும்
இதமானதொரு
மாலைப் பொழுதினிலே
அசைந்தாடிய
இலைகளும் கொடிகளுமே
சாட்சியாய் இருந்திட
ரம்யமானதொரு
ராகம் எங்கிருந்தோ
மெட்டெடுத்து
காற்றினில் மெல்ல
மிதந்து வந்திட
உன் மடியினில்
என் தலை
வைத்துரங்குவதுபோல்
பாவித்துக் கிடக்க
அட
என் இனிய
கனவு கலைந்தே
கலைந்து போயிற்றே
சொல்லத்தான்
நினைத்தேன்
கவிதை!
உன் முகம்
பார்த்த
நொடியில்
வார்த்தையின்றி
நின்றேன்!
உனக்கானது
உனக்கானதாய்
சர்வ நிச்சயமாய்
இங்குண்டு
உன் சுவாசம்!
இங்கில்லையெனில்
வேறு எங்கேனும்
சர்வ நிச்சயமாய்!!
இடமொன்று
வலமொன்றாய்
தனித்தனி
வழி செல்லும்
இரட்டை மாட்டு
வண்டியை
நேரே இழுத்துச்
செல்லும்
வண்டிக்காரனாய்
வாழ்க்கை!!
உன்னைப் பிரிய
மனமிலாது!
ஆனாலும்
இது தற்காலிக
பிரிவுதானே
கண்ணே!!
கலங்காதிரு
மீண்டும்
வருவேன்
உன்னை
புசிக்க,
புரட்டாசி
முடிவில்!!!
ஒவ்வொரு
முறையும்
தயக்கத்துடனே
உன் கதவை
திறக்க
எத்தனித்திருந்தேன்
ஏன்
சில பல சமயங்களில்
திறக்காமலேயே
இருந்துமிருந்தேன்
இப்போதோ
நீ வேண்டவே
வேண்டாமென
புறந்தள்ளியும்
இருக்கும்
கலையைத்
தெரிந்தும்
கொண்டேன்
இப்பொழுதும்
எப்பொழுதும்
ஏன்
முக்காலுமே
நீ நானாக
நான் நீயாக
வேண்டுமென
இனி
ஒருபோதும்
நினையேன்
எனில்,
என் நிலை?
உன்னுள்ளே
நான்
எப்போதும்
உண்டு
எட்டாக்
கனியாய்,
அணையா
விளக்காய்
சுவைக்க
நினைந்திடும்
கனியாய்
உன் நிலை
உனக்குப்
புரிந்திட்டால்
புலப்படும்
பின்
மனமும்
அறிவும்
ஒன்றாகும்
நினைவே
நான் சற்றே
என்னை பின்னோக்கி
கொண்டுசெல்ல
நினைக்கிறேன்!
நீயும் சற்றே
முன்னோக்கி
வருவாயா!!
நாம்
இருவரும்
சங்கமித்து
இனிவரும்
நிகழ்வுகளுக்கு
ஒரு சகாப்தம்
படைப்போம்!!!
எனை நானும்
உருமாற்றிக்கொள்ளும்
தவத்தைக்
கேட்டேன்!
கிடைத்தது
தினமொரு
உருவம்
முதலில் மகளாக
என் பெற்றோர்களுக்கு,
தமக்கையாக
என் உடன்பிறந்தோருக்கு,
உனக்கு மனைவியாக,
என் குழந்தைகளுக்கு
தாயாக, இருந்தும்
இன்னமும்
நான்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றேன்
உருமாற்றிக்கொள்ளும்
தவத்தை.
நான் கேட்ட உருவம்
இன்னும்
கிட்டியபாடுதான் இல்லை
என்னை படைத்த
உனக்குமா
தெரியவில்லை
நான் கேட்டது
உன்னிடம்
அருவமாய்
உன்னருகில்
இருக்க கேட்டேனென்று

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மகள் (ன்)

வாராதெனின்
யாதொரு
வலியுமின்றி
வரவழைக்கும்
தந்திர
வித்தையைக்
கற்றவள்(ன்)

மௌனம்

என்னை
நீ மறந்தாலும்
என் மொழிகளை
மறவாதிருக்க
என்னுள்ளே
மௌனத்தை
மொழியாக்கி
எழுதி வைத்தேன்
நானும், நீயும்
ஒன்றல்லவா!!

இசை

மௌனம்
உன் மொழியெனில்
அந்த மௌனம்கூட
இசைதான்!

தொலைதல்

உனக்கான
தருணங்களில்
என்னை நானே
தொலைத்திட
அறிந்துகொண்டேன்!!

ஆசை

உன்னைக்
காணும்
கண நேரம்
நானும்
குழந்தையாய்
மாறிட ஆசை!!

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

போக்குவரத்துச் சுட்டுக்குறி

உன்னை நானும்
என்னை நீயும்
முந்தும்
முயற்சியில்
நம் இருவரையும்
முந்தியதேன்னவோ
சிகப்பு விளக்கு!

மனமும் கழிவறையும்

உன்னைச்
சுத்தப்படுத்தும்
முயற்சியில்
உன்னை வென்று
என் மனதை
வென்றிட்டேனா
என்றரியாமல்
நானும்
இறுமாந்திருந்தேன்
உன்னை
சுத்தமாக்கி
விட்டேனென்று!!

பயம்

தினம் தினம்
பிணந்தின்னிக்
கழுகுகளாகவும்,
மிகக்கொடிய
விஷங்கொண்ட
பாம்புகளாகவும்
உருமாறிக்கொண்டிருக்கும்
மனிதர்களைப் பார்த்துப்
பழகிக்கொள்ள முயற்சிக்கும்
இந்நேரத்தில்
உன்னை நிஜத்தில்
கண்டபொழுதும்
பயமற்றுப்போனேன்!

வெளுப்பு

வெளு வெளுவென்று
வெளுக்கத்தான்
நினைக்கிறேன்
உன் உடைகளை!
அல்ல,
உன் மனதினை!

பெண் பிள்ளை

ஜனனத்தின்போது
என்னுயிர்ப்
பறிக்க
நீ குடுக்க
யத்தனித்த
நெல்மணிகளை
இப்போது
பட்டினி
மரணத்தின்போது
கேட்கிறேன்
குடுப்பாயா
உயிரோடிருக்க!

சுவாசம்

இசையினும்
இனிய
மெல்லிய
சுவாசத்தின்
சத்தமின்றி
கழியும்
நாட்களை
எண்ணி
இன்றே
முழுவதுமாய்
சுவாசிக்கிறேன்!!

வெங்காயம்

மெல்ல
இனி
நானழுவதை
நிறுத்திக்
கொள்வேன்
உன்
விலையைக்
கேட்டு!

காதலா

என்
உலகமே
நீயேன்றிருந்தேன்!
நீயோ
உன் மொழிகளே
எனக்குப்
புரியவில்லை
என்றொரு
சொல்லில்
வேற்று
கிரகவாசியானாய்!

அம்மா

யாருமில்லாது
போனாலும்
எதுவுமில்லாது
போனாலும்
கணவனே
(காதலனே)
போனாலும்
என்
பிள்ளைகளை
நான்
விடேன்!
அப்படி
நேரும்
நொடியில்
என்
பிள்ளைகள்
நலன்
முன்னோக்கி
இருந்திருக்கும்!!

நம்பிக்கை

ஊர்
எல்லையில்
ஓர்
வெளிச்சப் புள்ளி
என்னை
நான்
முழுதும்
உணர்ந்தபொழுது!

வரவேற்பு

வரவேற்பறை 
 என்
இரு கை
கரம் கூப்பி
வணங்கிடவே
நினைத்துன்னை
ஏறிட்டேன்!
நீயோ
என்
ஒரு கையே
போதுமென்றாய்
உன் கன்னத்தைப்
பதம் பார்க்க!!

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

காதல்

உன்
மெல்லிய
இசையினும்
இனிய
சுவாசத்தின்
சத்தமின்றி
கழியுதெந்தன்
நாட்கள்!


புதன், 31 ஜூலை, 2013

வர்ணங்கள்

ஏ! வண்ணங்களே
உங்களையும்
விட்டு வைக்கவில்லை
இந்த அற்ப மனிதர்கள்!
தங்களின்
கவிதை நடைக்கு
உங்களுக்குள்ளும்
பிரிவினையை
உண்டு செய்தான்!!

காற்று

உன் மனதினில் நிரந்தர இடத்தினில்
நான் குடியிருக்க  உன்னை நீயோ
ஏமாற்றிக்கொண்டே  இருக்கிறாய்!

மனமும், வயதும்

உன்னைக் கடக்க நானும்
என்னை அழித்திட நீயும்
முயன்றுகொண்டே இருக்கிறோம்
விடைதான் இன்னும் கிடைக்கவில்லை!
மனமும், வயதும்

விதை

ஒரு முறை செத்து
மீண்டும் துளிர்த்துவந்தேன்
உன்னில் மாற்றம் வருமென்று
ஆனால் நீயோ என்னை
மீண்டும் மீண்டும்
செத்து செத்து வாழச் சொல்கிறாய்!

எச்சம்

உன் இழி செயலை
நினைக்கும்போது
மனம் ஏனோ கனக்கிறது
உன்னை நினைக்கையில்
என்னுள் எனக்கே தெரியாமல்
ஒரு மன அழுத்தம்
ஏன்?
உன் ஜாதியின் எச்சத்தில்
அல்லவா நானும்
ஜனித்துள்ளேன்.

ஈரம்

சில்லென்ற காற்றின்
ஈரம் காயுமுன்
மனதின் ஈரத்தைக்
காய விட்டுவிடாதே
மிக சிறிதேனும்
மிச்சமிருக்கட்டும்
வரும் சந்ததியினருக்கு
எடுத்துக்காட்டுவதற்கு!

மரபாச்சி பொம்மை

மரபாச்சி பொம்மையுடன்
விளையாட ஆசை
சிறு பிள்ளையாய்!
நாளை நானும்
மரபாச்சி பொம்மையாக்கப்
படுவேனென்று தெரியாமல்!!

பாவம்பா கோழி

எனக்கு இரை கிடைக்குமென்றெண்ணி
உன் வீட்டுப்பக்கம் ஒதுங்கிவிட்டேன்
இன்று ஞாயிரென்று அறியாமல்

  பாவம்பா கோழி

என்ன விலை அழகே

என்ன விலை அழகே
உன் சிரிப்புகென்ன விலை
என்ன விலை அழகே
உன் அழகுக்கென்ன விலை
என்ன விலை அழகே
உன் தாய்மைக்கென்ன விலை
என்ன விலை அழகே
உன் மனிதத்துக்கென்ன விலை
என்ன விலை அழகே
என்ன விலை குடுத்தேனும்
வாங்க முடியுமோ உன்னை
நித்தம் வந்து என் நினைவில்
என்னை கொல்கிறாய்
உந்தன் அழகுக்கொன்றும் ஈடில்லையே

அவள்

அவளை கொஞ்சம்
சிரிக்க விடுங்கள்
அவள் வாய்
வலிக்கும் வரை
சிரிக்கட்டும்!

நேற்று எங்களை
அடக்கமற்ற சிரிப்பு
என்றடிக்கிய
பெருமான்களே
நாளையே கூட
அவள் சிரிக்க
மறந்துவிடலாம்
உங்களின்
அர்த்தமற்ற அடக்குதலில்!

அவளை கொஞ்சம்
சிரிக்க விடுங்கள்
அவள் கண்கள்
நீர் சொரியும்வரை
சிரிக்கட்டும்!

திருநங்கை

மெல்லத் திறந்த
கதவொன்று
அழுத்தமாய்
சாத்தப்பட்டது
என்னைப்
பார்த்த நொடியில்!

மனம்

என் மேனி
கருத்து
சிறுத்திருந்தாலும்
என் மனம்
என்னவோ
பெருத்து
வெண்மையாய்!!

பிம்பம்

       

என் இரு விழிகள்
மெல்லத் திறந்து
உன் முகம்
நினைந்திட
நினைக்கையில்
நீரில் அலைந்து
திரியும் பிம்பமாய்
உன் முகம்!
இன்னும் சற்றே
நினைவலைகளைத்
தட்டியெழுப்பி
பார்க்க எத்தனிக்கையில்
பல நாட்கள்
நீயின்றி
தலையணை
நனைந்த
என் முகமே
தெரிகின்றது!!

செவ்வாய், 26 மார்ச், 2013

உண்மை

பொய்மையிநூடே புழங்கும் உண்மையும் பொய்மையாகுமே!
என் செய்ய?
இவ்வுலகம் பொய்மையில் கரைந்துள்ளதே!!
இவ்வுலகமே பொய்மை எனில்,
உண்மை இங்குண்டோ?
அவ்வுண்மை எடுபடுமோ?
மானிடா உன் தலை நிமிர்ந்திட 
உண்மையை உயிர்தெழச்செய்யடா.

கலங்காதிரு மனமே

வாழ்க்கையில் தோல்வி எனில் 
உன்னில் புரட்சி வெடித்து
புரட்சி கவிதைகள் வெடிக்கும்!
காதல் தோல்வி எனில் 
உன்னில் சோக கீதங்கள்!!
காதல் வெற்றி எனில்
உன்னில் பூ பூத்து,
காதல் கவிதைகளாகும்!
நட்பு மலர்ந்தால் 
உன்னில் நட்பின் மணம் வீசும்!!
எதற்கும் கலங்காதிரு மனமே
அனைத்தும் கடந்து போகும்
நீ நீயாக இருக்கும் வரை!!

கலங்காதிரு மனமே

வாழ்க்கையில் தோல்வி எனில் 
உன்னில் புரட்சி வெடித்து
புரட்சி கவிதைகள் வெடிக்கும்!
காதல் தோல்வி எனில் 
உன்னில் சோக கீதங்கள்!!
காதல் வெற்றி எனில்
உன்னில் பூ பூத்து,
காதல் கவிதைகளாகும்!
நட்பு மலர்ந்தால் 
உன்னில் நட்பின் மணம் வீசும்!!
எதற்கும் கலங்காதிரு மனமே
அனைத்தும் கடந்து போகும்
நீ நீயாக இருக்கும் வரை!!

Kaathal

மல்லிகைப்பூவின் வாசம் வீசுதடி
மெல்லிய சருகாய் ஆன
உந்தன் மனமும் பேசுதடி 
அப்பேச்சினிடையே உந்தன் 
வெட்கப் புன்னகை எட்டிப் பார்த்து
உந்தன் காதலை என்னிடத்தில் 
கூறிட துடித்ததடி!
உன்னிலையை என்னிடத்தில்
இலைமறை காய்மறையாய் 
நீ கூறுமுன்போ, என் இதயத்தை 
ஓராயிரம் அணுக்கள் வைத்து
தகர்க்கத் துடிக்கும் பீரங்கியாய்
உன்னை நானும் நினைத்தேனடி!!

வாழ்க்கை !!!

வாழ்க்கை !!!

வாழ்வின் சுழற்சியிநூடே 
சுழலத் தெரிந்தவன்
சம்சாரி ஆகிறான்!
வாழ்வின் சுழற்சியின்
வேகத்துக்கு பயந்தவன்
சந்நியாசி ஆகிறான்!!
வாழ்வின் சுழற்சியை
எதிர்த்து நிற்பவன்
போராளி ஆகிறான்!
வாழ்வின் சுழற்சியை
தன கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்
சித்தன் ஆகிறான்!

புதன், 13 பிப்ரவரி, 2013

காதல் செய்ய வாரீர்

உன் கடைக்கண் பார்வை பட்டுத் தெரித்திட
என் மனம் வண்ண வண்ண உடைகள்தனை
உடுத்திக்கொள்ள விழைகின்றதே!!
நீர் வரும் செய்தி அறிந்திட
மனம் விழைகின்றதே!!
நீர் வரும் நேரத்தில் நம்மையன்றி
வேறு யாருமில்லா நிமிடங்களை
மனம் நாடுகின்றதே!!
நீர் வந்த செய்தி அறிந்து உம்மை
எண்ணிலடங்கா ஆசையுடன்
மனம் முழுதும் நிரப்பி
என்னவன் ஆக்கிட
எனதுள்ளம் துடிகின்றதே!!
இதை நீரும் அறிவீரோ?
என் மன்னவரே!!!

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பெண்மை

"
அந்தி நேரத்தில்
மழைச்சாரலுடன்
ஒரு இனிய இரயில்
பயணம்
சில்லென்ற காற்று
அம்மா அம்மா குளிர்கிறது
என்கிறது ஒரு குரல்,
குறு குறு பார்வைகள்
என் துப்பட்டாவை நோக்கி
என் செய்வேனோ
பெண்மையும் தாய்மையும்
ஒரு சேர மோதிக்கொள்கின்றதே...
"

போராளி


"வாழ்வில்
போராடி தோற்றுப்பார்
உன்னை ஜெயிதவனும்கூட
உன்னை விரும்புவான்"

கர்வம்


"சிறகுகள் முளைந்த சந்தோஷத்தில்
சிட்டுகுருவியாய் பறந்தேனே
சீக்கிரமே வீழ்ந்தேனே
பிறகுதான் தெரிந்தது
முளைந்தது சிறகுகள் அல்ல
என் கர்வம் என்று"

வலி

"வலி.. வலி..
வலி மட்டுமே..
என் வாழ்வில்
எதற்காம்?
ஒளிப்பதற்கு!
(ஜொலிப்பதற்கு)"

அன்பு


"உன் பணமும் வேண்டாம்
உன் பகட்டும் வேண்டாம்
உன் ஆள் பலமும் வேண்டாம்
நீ பணக்காரனாகவே இருந்தாலும் கூட
உன் அன்பு மட்டும் போதும்"

உயிர்


"வாய் பேசவில்லை
கண்கள் பேசவில்லை
கைகளும் பேசவில்லை
உனக்காக
என் உயிர் மட்டும்
துடித்துகொண்டிருக்கிறது"

கல்யாணம்

தலை வாரிப் பூச்சூடி
பட்டுடுத்திப் புது சேலை கட்டி
பொன் நகைகள் பூட்டி
கொளு பொம்மையாய்
காத்து நின்றேனே
உன்னுடன் என்
வாழ்க்கைப் பயணத்தை
தொடர்ந்திட...

முகம்

"என் முகம்
அறிந்த பலர்
என் அகம்
அறியாமல்
என் பக்கத்தில்..."

பொய்


"பொய்யிலே புலர்ந்து
பொய்யிலே வளர்ந்து
போய்யினாலான உலகத்திலே
உண்மையாய் வாழ்ந்திடலாகுமோ!
அப்படி வாழ்ந்திட்டாலும்
உன்னை இவ்வுலகம் ஏற்றுக்கொள்ளுமா?"

மாட்டுப்பெண்

"
அன்பென்ற ஆயுதமேந்தி
ஆசையென்னும் அணிகலன் பூட்டி
இல்லறமெனும் கடலில் மூழ்க
ஈகை எனும் அரண் அறிந்து
உவகை எனும் உணர்வறிந்து
ஊலல்லா பாடி மகிழ
எட்டு திசையிலிருந்தும் வாழ்த்திட
ஏற்றம் பல வாழ்வில் பெற்றிட
ஐயமிலா வாழ்வு நிலைத்திட
ஒற்றுமையும் வேற்றுமையும் அறிந்திட
ஓசையுடன் பாட்டுப்பாடி
வரவேற்போம் நம் வீட்டுப் பெண்ணை
ஆம் நம் வீட்டுப் பெண்!
"

தனிமை

"நீ அருகில்
இல்லாது போனாலும்
என் தனிமையை
நான் உணர்ந்ததில்லை
ஏனெனில்
என் இதயத்தில் நீ!"

வெட்கம்


"கண்ணாடியில்
தெளிவாய் தெரிகிறது
என் வெட்கம்
உன்னிடத்தில்
என் காதலை
சொன்ன வினாடியில்.."

உள்ளம்


"
உள்ளத்துள்ளல் உயருள்ளல்
இல்லத்து வாரின்
துயருள்ளலாமே!
இவ்வுலகினில் வந்துதிக்கும்
அனைத்து உயிர்களுமே
உள்ளத்துள்ளல் உயருள்ளல்!
ஆனால் அதன் உயிர்ப் போகுமுன்
அது படும் பாடு துயருள்ளலே!
இத்துயர் போக்கிடவே,
நம் குலம் வாழ்ந்திடவே,
பெரியோர்கள் பலர்
உயருள்ளளோடு வகுத்திட்ட
வழியினை பின் பற்றிடல்
உத்தமமே!
நீதி நெறி தவறாமை
பொய் புறம் கூறாமை
அடுத்தவர் குடி கெடுக்காமை
இன்னும் பிற நல்லனவையை
சிற்றரிவைத் தள்ளி வைத்து பின்பற்றிட
உள்ளத்துள்ளல் உயருள்ளலாமே!
"

அன்பு

"
கண் காண தேசத்திலிருந்தாலும்,
கண் முன் இருந்தாலும் ஒன்றுதான்.
அள்ளி அள்ளி எதையும் எதிர்பாராது,
அள்ள அள்ள குறையாது,
அமுதசுரபி பாத்திரத்தை போன்று
திகட்ட, திகட்ட
திரும்பத் திரும்ப
சுவைக்க, சுவைக்க
பிறருக்குத் தருவதுதான்
அன்பு!!!
பிறரிடம் எதிர்ப்பார்ப்பதல்ல.
"

பெண்


"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துகொண்டால் கண்களை மீன்களுக்கும், முகத்தை நிலவுக்கும்
இன்னும் பிற உடலுறுப்புக்களை நன் முறையில் உருவகப்படுத்தி எழுதும் எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் தவறாக எழுதிவிட்டார்களா என்ன?

பெண்ணை பூமித்தாய்க்கு நிகராக குறிப்பிட்டதை தவறாக
எண்ணி அப்பெண்ணுக்கு என்ன செய்தாலும் தாங்கிக்கொள்வாள் அல்லது ஏற்றுகொள்வாள் என்று நினைத்துவிட்டார்களா இந்த கயவர்கள்.

பெண்ணின் உடலை மிருகங்கள் தினம் தினம் அடித்து கொன்று தின்கின்றதே! என் செய்வேன் நானும் இப்பெண் இனத்தின் ஒரு உறுப்பினராக?"

சரியா? தவறா?


"
உனக்கு சரி என்பது எனக்கு தவறு.
எனக்கு சரி என்பது உனக்கு தவறு.
அதற்காக உனக்கு சரி என்று பட்டதை
நான் சரி என்று கூற இயலாது.
எனக்கு சரி என்று பட்டதை நீ சரி
என்று கூறவேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது
இப்ப சொல்லுங்க சரி என்பது சரியா?
தவறு என்பது தவறா?
சரி என்பது தவறு எனின் சரி என்பது என்ன?
தவறு என்பது சரி எனின் தவறு என்பது என்ன?
அப்ப சரின்னா என்ன? தவறுன்னா என்ன?
"

நட்பு


"குறுகுறுப் பார்வையுநூடேயுள்ள
முழு உடையும் முழு நிர்வாணமே எனில்
பொய்யுடன் கூடிய நட்பு?"

நம்பிக்கை

"
தனியே தன்னந்தனியே
அமர்திருக்கும்போதினிலே
உயிர்ப் பிரிதல் புலப்பட்டு
உன் கண்களில் பயத்தை
தெரிக்கின்றதே! அது ஏன்?
உன்னுள் உனக்கே தெரியாமல்
தூங்கிகொண்டிருக்கும்
உன் தன்னம்பிக்கையை
கொஞ்சம் தட்டி எழுப்பிப்
பாரடா! உன் உயிர் பிரிதல்
துச்சமென்றே ஆகிவிடுமடா!!
"

காதல்

"கருவாய் அருவாய் நிறைவாய்
வருமிந்தக் காதல்!
அதனின்று வெருரொன்றுமில்லை
என்றே மாய வலையினில் புதைத்து
உன்னை நித்தமும் கொன்றே செல்லுமே
இந்தக் காதல்!!"

மனதில் பதிந்த காட்சிகள்


"
இனிய மாலை வணக்கம் நண்பர்களே. இரண்டு நாட்களாக மின்சார இரயிலில் பயணிக்கும்போது கண்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு நிகழ்வு திருநங்கைகளைப் பற்றியது. ஏனோ இங்கு எனதருமை அண்ணன் @prabin raj நினைவுக்கு வருகிறார். நான் முன்பு ஒரு முறை திருநங்கைகளை முறைகேடாக நடத்துகின்றனர் என்று கருத்துப் பதிவு செய்தபோது அவர் சொன்னது அவர்களின் இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்றார். அது உண்மை என்பது போல் இருந்தது காலையில் நான் கண்ட காட்சி. இரயில் பெட்டியில் ஏறி அனைவரிடத்திலும் பிச்சைக் கேட்டார் அதில் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் மாணவனும் அடக்கம். ஒரு சிறு பிள்ளையிடம் கேட்கிறோம் என்ற வெட்கம் சிறிதுமின்றி அவர் கேட்டவிதம் மனதை பாதித்தது. இதில் விசேஷம் என்னவெனில் அந்த சிறு பயன் என்னிடமே நான் மனதில் நினைத்ததைக் கூறினான் "அக்கா நான் சின்ன பயந்தானே என்கிட்டபோய் பிச்சை கேட்கிறார்கள்". @prabin raj அண்ணே நான் உங்களின் கூற்றை ஒத்துக்கொள்கிறேன்.

இன்னொரு நிகழ்வு, வேலைக்குச் செல்லும் பெண்களைப் பற்றியது. பாவம் அவ்வளவு காலையில் எழுந்து தலைகூட வாராமல், காலை உணவுகூட வீட்டில் அமர்ந்து சாவகசமாக உண்ணக்கூட முடியாமல் அப்படி யாருக்காக உழைக்கிறார்கள்.அவர்களின் குடும்பதிற்காகவெனில் கணவன்மார்களே கொஞ்சம் அவர்களை விசேஷமாக கவனியுங்கள். விசேஷமாக என்றால் உடனே கேள்வி கேட்காதீர்கள் உங்கள் அன்பான வார்த்தைகள் ஒன்றே போதுமானது.
"

பற்று

"
என்ன கொடுமையடா!
இந்த மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு உயிருக்கும்,
உறவுக்கும் உறவுப்பாலமாய்
இருத்தலினால் உருவாகும்
பந்தத்தில் சிக்குண்டுக்
கிடப்பதுவும், தவிப்பதுவும்!!
பற்றற்ற நிலையை நோக்கியப்
பயணங்கள் இடையினில்
தடைபடுவதுவும், மறைந்திடலும்!!
என்று முடியும் எம் பயணம்
என்று முடியும் எம் பயணம்
என்றே நித்தமும் நினைந்திட்டே
எம் பயணங்கள் தொடர்கிறதே
பற்றுதலுடனே பற்றுதலற்ற நிலைக்கு!!!
பயணம் முடிவதெப்போது
என்று தெரியாமலே பணிப்பதுவும்கூட
பற்றுதலன்றி வேறேது!!!
இந்த பற்றுதலினூடெ பயனிப்பதுவும்
எமக்கு பற்றுதலே!!!
"

வாழ்க்கை

இரவு முடிந்து
விடியலை நோக்கிய
நம் பயணம் வாழ்வின்
துவக்கமா? முடிவா?
வாழ்வின் துவக்கமெனில்
அவ்வாழ்வின் இனிமையை
மற்றவர்களுக்கு சேர்த்திடு!
வாழ்வின் முடிவெனில்
வாழ்ந்த வாழ்க்கையில்
மற்றவர்களுக்கு என் செய்தாய்?
அதை நினைந்துகொண்டே
வாழ்வின் முடிவை ஏற்றுக்கொள்!!
"

உழவன்



"நமக்கு உணவளிப்பதாலேயே
உழவனை நாம் தாயாக்கினோம்!
அவ்வுழவனை தினம் தினம்
பிளாட் போட்டு விற்று
முதியோர் இல்லத்திற்கு அனுப்புவது
எவ்விதத்தில் நியாயம்!!"