செவ்வாய், 1 அக்டோபர், 2013

எனை நானும்
உருமாற்றிக்கொள்ளும்
தவத்தைக்
கேட்டேன்!
கிடைத்தது
தினமொரு
உருவம்
முதலில் மகளாக
என் பெற்றோர்களுக்கு,
தமக்கையாக
என் உடன்பிறந்தோருக்கு,
உனக்கு மனைவியாக,
என் குழந்தைகளுக்கு
தாயாக, இருந்தும்
இன்னமும்
நான்
கேட்டுக்கொண்டே
இருக்கின்றேன்
உருமாற்றிக்கொள்ளும்
தவத்தை.
நான் கேட்ட உருவம்
இன்னும்
கிட்டியபாடுதான் இல்லை
என்னை படைத்த
உனக்குமா
தெரியவில்லை
நான் கேட்டது
உன்னிடம்
அருவமாய்
உன்னருகில்
இருக்க கேட்டேனென்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக