இதமானதொரு
மாலைப் பொழுதினிலே
அசைந்தாடிய
இலைகளும் கொடிகளுமே
சாட்சியாய் இருந்திட
ரம்யமானதொரு
ராகம் எங்கிருந்தோ
மெட்டெடுத்து
காற்றினில் மெல்ல
மிதந்து வந்திட
உன் மடியினில்
என் தலை
வைத்துரங்குவதுபோல்
பாவித்துக் கிடக்க
அட
என் இனிய
கனவு கலைந்தே
கலைந்து போயிற்றே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக