செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

பற்று

"
என்ன கொடுமையடா!
இந்த மண்ணில் பிறக்கும்
ஒவ்வொரு உயிருக்கும்,
உறவுக்கும் உறவுப்பாலமாய்
இருத்தலினால் உருவாகும்
பந்தத்தில் சிக்குண்டுக்
கிடப்பதுவும், தவிப்பதுவும்!!
பற்றற்ற நிலையை நோக்கியப்
பயணங்கள் இடையினில்
தடைபடுவதுவும், மறைந்திடலும்!!
என்று முடியும் எம் பயணம்
என்று முடியும் எம் பயணம்
என்றே நித்தமும் நினைந்திட்டே
எம் பயணங்கள் தொடர்கிறதே
பற்றுதலுடனே பற்றுதலற்ற நிலைக்கு!!!
பயணம் முடிவதெப்போது
என்று தெரியாமலே பணிப்பதுவும்கூட
பற்றுதலன்றி வேறேது!!!
இந்த பற்றுதலினூடெ பயனிப்பதுவும்
எமக்கு பற்றுதலே!!!
"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக