வியாழன், 29 ஆகஸ்ட், 2013
வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013
போக்குவரத்துச் சுட்டுக்குறி
உன்னை நானும்
என்னை நீயும்
முந்தும்
முயற்சியில்
நம் இருவரையும்
முந்தியதேன்னவோ
சிகப்பு விளக்கு!
மனமும் கழிவறையும்
உன்னைச்
சுத்தப்படுத்தும்
முயற்சியில்
உன்னை வென்று
என் மனதை
வென்றிட்டேனா
என்றரியாமல்
நானும்
இறுமாந்திருந்தேன்
உன்னை
சுத்தமாக்கி
விட்டேனென்று!!
பயம்
தினம் தினம்
பிணந்தின்னிக்
கழுகுகளாகவும்,
மிகக்கொடிய
விஷங்கொண்ட
பாம்புகளாகவும்
உருமாறிக்கொண்டிருக்கும்
மனிதர்களைப் பார்த்துப்
பழகிக்கொள்ள முயற்சிக்கும்
இந்நேரத்தில்
உன்னை நிஜத்தில்
கண்டபொழுதும்
பயமற்றுப்போனேன்!
பெண் பிள்ளை
ஜனனத்தின்போது
என்னுயிர்ப்
பறிக்க
நீ குடுக்க
யத்தனித்த
நெல்மணிகளை
இப்போது
பட்டினி
மரணத்தின்போது
கேட்கிறேன்
குடுப்பாயா
உயிரோடிருக்க!
சுவாசம்
இசையினும்
இனிய
மெல்லிய
சுவாசத்தின்
சத்தமின்றி
கழியும்
நாட்களை
எண்ணி
இன்றே
முழுவதுமாய்
சுவாசிக்கிறேன்!!
காதலா
என்
உலகமே
நீயேன்றிருந்தேன்!
நீயோ
உன் மொழிகளே
எனக்குப்
புரியவில்லை
என்றொரு
சொல்லில்
வேற்று
கிரகவாசியானாய்!
அம்மா
யாருமில்லாது
போனாலும்
எதுவுமில்லாது
போனாலும்
கணவனே
(காதலனே)
போனாலும்
என்
பிள்ளைகளை
நான்
விடேன்!
அப்படி
நேரும்
நொடியில்
என்
பிள்ளைகள்
நலன்
முன்னோக்கி
இருந்திருக்கும்!!
வரவேற்பு
வரவேற்பறை
என்
இரு கை
கரம் கூப்பி
வணங்கிடவே
நினைத்துன்னை
ஏறிட்டேன்!
நீயோ
என்
ஒரு கையே
போதுமென்றாய்
உன் கன்னத்தைப்
பதம் பார்க்க!!
செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)