ஞாயிறு, 25 மே, 2014

தன்னம்பிக்கை

தெளிவுறும் கணங்களின்
சில மணித் துளிகளின்
மரண வலிகளை தவிர்க்காது...
பயணப்படும் பயணங்களின்
முடிவில் மரணித்துவிடுகிறது
எந்தன் பயம்....
இன்னும் சற்றே பயணப்பட
முற்படுகையில்...
இன்னும் சற்றே அழுத்தமாய்
பயம் வந்தடைந்து...
முடிவில் மரணித்துவிடுகிறது
தெளிவின்மை...
பயந்து பயந்தே
சென்றடையும் பாதையின்
முடிவில் மரணித்து...
மீண்டும் ஜனிக்கிறேன்
புத்தம்புது பூவாய்...
தன்னம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக