மெதுவாய் நகரும்
கடிகார மணித்துளிகளின்
சத்தங்களுக்கிடையே
மெல்லிய கவிதையாய்
உன்னுடனான என் பயணம்...
ஒவ்வொரு முறையும்
உன்னைக் கொஞ்சம்
கட்டிக்கொள்ளவா,
முத்தமிட்டுக் கொள்ளவா,
என்று லாவகமாய்
உன் அன்பின் தோழமையை
வெளியிடும் தருணத்திற்காய்
நீ ஒவ்வொரு முறையும்
சிறு குழந்தையாய்,
தவழ்ந்து, தவழ்ந்துக்
காத்திருக்கையில்
என் தோழனாய்,
என் தமையனாய்,
ஏன் என் பிள்ளையாயும்
பரிமளித்தாயடா....
என் உயிரிலும் கலந்திட்ட
உன் தோழமை உணர்வு...
உன்னுடனான என் பயணத்தின்
ஆரம்பப் புள்ளியின்
அரிச்சுவடியை
நானும் கவனமாய்ப்
புரட்டிப், புரட்டிப்
பார்கின்றேன் என்றேனும்
உன் முத்தத்தின் ஈரமும்,
உன் அணைப்பின் கதகதப்பும்
எக்கனமேனும் என்னைச்
சலனப்படுதியதா
என்றெனும் கேள்வியுடன்...
பதில் கிடைத்ததென்னவோ
ஒரு குழந்தையின் முகமும்,
ஒரு தாயின் மனமும் மட்டுமே...
வா மீண்டும், மீண்டும்
அணைத்து, அணைத்து
விளையாடலாம்.....